Disqus Shortname

பழுதான மின்கம்பங்களை மாற்றக்கோரி கொட்டும் மழையில் மக்கள் மறியல்

உத்தரமேரூர் ஜீன் 09
உத்தரமேரூர் அடுத்த பேரணக்காவூர் கிராமத்தில் சுமார் 500 கும் மேற்பட்ட
மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிரமத்தில் பல மாதங்களாக 10 திற்கும்
மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதாகியுள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள்
மின்சாரத்துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் அவர்கள் எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்தது அதில் பழுதான 10திற்கும் மேற்பட்ட கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் கிராம மக்கள் விட்டை விட்டு வெளியேறி கொட்டும் மழையில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலரிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்காலிகமாக கம்பங்களை சரிசெய்தனர். விரைவில் மாற்றித்தருவதாக உறுதியளித்த பின் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments