சிறுமயிலூரில் அம்மா திட்ட முகாம்
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம்
சிறுமயிலூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட முகாம் நடந்தது. வட்டாட்சியர் வி.ரவி வரவேற்றார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன்,
ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். காஞ்சி மேற்கு மாவட்ட கழக
செயலாளரும் உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் பெறப்பட்ட மனுக்களுக்கான
உத்தரவு நகலை வழங்கினார். இம்முகாமில் 36 மனுக்கள்
பெறப்பட்டன, 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 9 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.
8 மனுக்கள் நிலுவையில் உள்ளது. சிறுமயிலூர்
ஊராட்சி மன்றத்தலைவர் கெ.மாதவன், குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், தண்டரைதணிகைவேல், ஒன்றிய குழு உறுப்பினர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து
கொண்டனர். மன்ற துணைத்தலைவர் வி.தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.
No comments