Disqus Shortname

குடிநீர் தேவைக்காக பொது மக்கள் சாலை மறியல்

உத்தரமேரூர் ஜீன்,06 


உத்தரமேரூர் அடுத்த மானாம்பதி கூட்ரோட்டில் பெருநகர் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பகுதி அகஸ்தியப்பநகர்    இப்பகுதியில் 700ற்க்கும் மேற்ப்ட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் தங்களது தேவைக்கான குடிநீரை காஞ்சிபுரம் வந்தவாசி சாலையை கடந்து  வயல்வெளிகளில் இருந்து குடிநீர் கொண்டு வந்த பயன்படுத்தி வந்தனர். இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் அகஸ்தியப்பநகர்  பகுதி மக்கள்  காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் தகவல் அறிந்த பெருநகர் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார்  சம்பவம் இடத்திற்க்கு வந்து பொது மக்களிடம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 10 லட்சம் மதிப்பிலான குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் தேவைக்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் ஒரு சில நாளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீங்கிவிடும் என்று உறுதி அளித்ததால் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் வந்தவாசி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments