Disqus Shortname

மீண்டும் பேரூந்து இயக்க கோரிக்கை

உத்தரமேரூர் மே 04
எலப்பாக்கத்தில் இருந்து காட்டுக்கரணை, ராமாபுரம், பாதிரி, சிறுதாமூர்.
எல்.எண்டத்தூர், தீட்டாளம், கம்மாளம்பூண்டி, உத்தரமேரூர் செங்கல்பட்டு
வழியாக கோயம்பேடிற்கு செல்லும் தடம் எண் 77ஏ இந்த பேரூந்து விடியற் காலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னைகோயம்பேடிற்கு நாள் ஒன்றிக்கு 4 முறை சென்றுவரும் ஆனால் தற்போது மாதத்திற்கு ஒரு முறையே அல்லது இரு முறையே மட்டும் தான் வருகிறது. இதனால் இடையில் உள்ள 50 திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லூரி, வேலைக்கும் மற்றும் வியாபார நிமிர்தமாக கூடுவாஞ்சேரி மறைமலைநகர் சிங்கப்பெருமாள் கோவில் செங்கல்பட்டு உத்தரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால் இந்த பேரூந்தையே நம்பியுள்ளனர். ஆனால் இந்த பேரூந்து சரிவர இயக்கப்படாததால் இடையில் உள்ள கிராம மக்கள் எமாற்றத்திற்குள்ளாவதுடன் மிகுந்த சிரமபடுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் தங்களது பகுதிக்கு செல்வதற்கு உத்தரமேரூர்
வந்தடையும் கிராமமக்கள் இந்த பேரூந்து வரவில்லை என்றால் உத்தரமேரூர்
பேரூந்து நிலையத்தில் தங்கி மறுநாள் காலையில் செல்கின்றனர். இதில்
நோயாளிகள் பெண்கள் முதியவர்கள் மிகுந்த சிறமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த வழிதடத்தில் இயங்கிவந்த 77ஏ பேரூந்தை மீண்டும் இயக்க அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments