காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.கவின் தெருமுனை பிரச்சார கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கழகம் உத்தரமேரூர் சட்ட மன்றம், காஞ்சிபுரம் ஒன்றிய
கழகத்தின் சார்பில் அங்கம்பாக்கம், அவளுர், தம்மனூர், ஆகிய கிராமங்களில் கழக அரசின்
மூன்றாண்டு சாதனைகளை விளக்குதல் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி ஒன்றிய கழக செயலாளரும், காஞ்சி ஒன்றிய குழுபெருந்தலைவர் தும்பவனம்டி.ஜீவானந்தம்
தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர்
வாலாஜாபாத்பா.கணேசன் முன்னிலை வகித்தார். தெருமுனை பிரச்சார கூட்டத்தில் நட்சத்திர
பேச்சாளரும் திரைப்பட நடிகர் ராமராஜன் கலந்துகொண்டு மூன்றாண்டுகளில் அ.தி.மு.க அரசு
செய்துள்ள சாதனைகளை பற்றி மக்களுக்கு நகைச்சுவையுடனும் பாடல்கள் பாடியும் விளக்கி கூறினார்.
காஞ்சி எம்.எல்.ஏ.வி.சோமசுந்தரம், காஞ்சி ஊராட்சி குழு தலைவர் காஞ்சி. பன்னீர்செல்வம்,
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் என்.எம். வரதராஜிலு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரிநாகராஜன்,
கே.யு.எஸ்.சோமசுந்தரம், வி.வள்ளிவிநாயகம், அங்கம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கே.முருகன், தம்மனூர்
ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சாலட்சிபிள்ளையார் அவளுர்
ஒன்றிய குழு உறுப்பினர் பி.சிவகாமி பழனி, கிளை செயலாளர் எஸ்.மோகன், கே.கோவிந்தசாமி,
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
No comments