Disqus Shortname

புல்லம்பாக்கம் திருமுக்கூடல் சாலை தார் சாலை அமைக்கப் பொது மக்கள் கோரிக்கை

உத்தரமேரூர் ஜீலை, 04
உத்தரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் இருந்து திருமுக்கூடல் செல்லும்
சுமார் 6கிமீ சாலை தார் சாலை அமைக்கப் கிராம மக்கள் கோரிக்கை.
உத்தரமேரூர் அடுத்த , புல்லம்பாக்கம் கிராமத்தில் இருந்து பொதுமக்கள்
மாணவர்கள் ஏராளமானோர் திருமுக்கூடல் சென்று அங்கிருந்து வாலாஜாபாத்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு வியாபர நிமர்த்தமாகவே
அல்லது கல்லூரிக்கே செல்கின்றனர். இதே போல் திருமுக்கூடலில் அரசு
மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவியர்கள் ஏராளமானவர்கள் இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு பேரூந்து
வசதி இல்லாததால் பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர்.
இந்த சாலை கடந்த சில வருடங்களாக மிகவும் குண்டும் குழியுமாக இருந்தது.
அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்ககைவிடுத்ததன் பேரில் கடந்த 6 மாதத்திற்கு
முன்பு சாலை சிரமைப்பிற்காக சுமார் 9 லட்சம் மதிப்பில் கருங்கற்கள்
கொட்டப்பட்டு மேலே செம்மண் நிரப்பப்பட்டது. இது அண்மையில் பெய்த மழையில்
சேறும் சகதியுமாக மாரியது. இதனால் இந்த சாலையை கடக்கும் கிராம வாசிகள்
நடந்து செல்வதற்கு முடியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றால் வாகனம் ஓட்ட
முடியாமல் கிழே விழுந்து காயமடைக்கின்றனர். இது மட்டுமின்றி இந்த சாலையை
கடக்கும் போது பள்ளி மாணவ. மாணவ, மாணவியரின் பள்ளி சிருடைகள் சகதி
ஆவதுடன் உரிய நேரத்தற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல்
அவதிக்குள்ளாகின்றனர். மேலும் முதியவர்களும் நோயாளிகளும் இந்த சாலையை
பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர். எனவே இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தர அப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments