Disqus Shortname

காஞ்சீபுரத்தில் பயங்கர சம்பவம் கர்ப்பிணி பெண்ணை குத்திக்கொன்ற காதலனுக்கு வலைவீச்சு

உத்தரமேரூர் Jun 01

காதலித்த கர்ப்பிணி பெண் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பிணியாக்கியவர்
 காஞ்சீபுரம் அருகே நசரத்பேட்டையை அடுத்த கன்னிகாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஒரகடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் வி.ரஞ்சித்குமார் (வயது25). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.  காஞ்சீபுரம் அருகே உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த ரம்யா (வயது20) என்ற பெண்ணுடன் ரஞ்சித்குமாருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது ரஞ்சித்குமார் உன்னைத்தான் திருமணம் செய்வேன் என ஆசை வார்த்தைகளை கூறி ரம்யாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதன்காரணமாக ரம்யா 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். மேலும் ரம்யாவை சின்ன காஞ்சீபுரம் நாகலூத்து தெருவில் ஒரு வாடகை வீட்டில் ரஞ்சித்குமார் தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

பெற்றோர் எதிர்ப்பால் திருமணம்
ரஞ்சித்குமாரின் காதல் விவகாரம் அவரது தந்தை சப்–இன்ஸ்பெக்டரான வேல்முருகனுக்கு தெரியவந்தது. அவர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அவர் உடனடியாக ரஞ்சித்குமாருக்கு காஞ்சீபுரம் அடுத்த ஐயம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சாலினியை கடந்த மாதம் 23–ந்தேதி திருமணம் செய்து வைத்தார்.
தட்டிக்கேட்ட கர்ப்பிணி காதலி கொலை
ரஞ்சித்குமார் திருமணம் செய்து கொண்ட தகவல் ரம்யாவுக்கு தெரியவந்தது. இதில் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு வந்த காதலன் ரஞ்சித்குமாரிடம் ‘என்னை கர்ப்பிணியாக்கிவிட்டு வேறொரு பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று தட்டிக்கேட்டு ரம்யா தகராறு செய்ததார்.

குத்திக்கொன்ற கொடூரம்
இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் ரம்யாவை வீட்டில் வைத்து கத்தியால் உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் ரம்யா துடிதுடித்து பரிதாபமாக செத்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு வி.சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜ், பழனி, சப்–இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன் முரளி, மற்றும் போலீசார் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட ரம்யாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ரம்யாவை கொலை செய்த காதலன் ரஞ்சித்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments