Disqus Shortname

உத்தரமேரூரில் சோழா அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

உத்தரமேரூர் ஜீன்-24
உத்தரமேரூர் சோழா அரிமா சங்கம் 2013-2014 புதிய பொறுப்பாளர்கள் பதவி
ஏற்பு விழாவும், சேவைத்திட்டங்கள் வழங்கும்விழாவும் சனிக்கிமையன்று
நடந்தது. சங்கத்தலைவர் யூ.அமர்தலால் தலைமை தாங்கினார். சாசன தலைவர் டாகடர்.சி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் கே.வி.சேகர் வரவேற்றார். துணைத்தலைவர் ஆ.ஏழுமலை தொகுப்புரையாற்றினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் சாயர் டி.அரவிந்தகுமார் உத்தரமேரூர் சோழா அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் தலைவராக ஜி.காளிதாஸ், செயலாளராக தே.வீராசாமி, பொருளாளராக
எம்.மணி, துணைச்செயலாளராக கோ.சந்தானகிருஷ்ணன் ஆகியோர்களை பதவியில் அமர்த்தி அரிமாசங்கசெயல்பாடுகள் நடவடிக்கைகள் பற்றி சிறப்புரையாற்றினார்.மாவட்ட 2ம் துணை ஆளுநர் கே.பி.குமணன், சேவை திட்டங்கள் துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். ஹீராஜிவல்லர் உரிமையாளர் ரமேஷ் 10, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு கை கடியாரம், தனலட்சுமி நவீன அரிசி ஆலை உரிமையாளர் ஆர்.நீலகண்டன் 20 நபர்களுக்கு இலவச அரிசிகள் வழங்கினார். அரிமா சங்கம் சார்பில் 75 தென்னங்கன்றுகள், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவியருக்கு பரிசுகள், ஏழை எளிய மக்கள் 25 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. டாக்டர் பி.ஆனந்த் நன்றி கூறினார்.

No comments