திருமுக்கூடலில் மனு நீதி நாள் முகாம்
உத்தரமேரூர் ஜீன்,20
உத்தரமேரூர் தாலுக்கா திருமுக்கூடல் கிராமத்தில் புதன்கிழமையன்று மனுநீதி நாள் முகாம்
நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட
குழு உறுப்பினர் சுமதி குணசீலன் வரவேற்றார். காஞ்சி வருவாய் கோட்ட அலுவலர்
சக்தி மணி முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத்
பா.கணேசன் கலந்து கொண்டு ஒரு ஆயிரம் வீதம் 117 பயனாளிகளுக்கு முதியோர்
உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்
கே.பிரகாஷ்பாபு ஒன்றிய குழு உறுப்பினர் வாடாதவூர் டி.எம்.சடையாண்டி,
உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் திருவந்தவார் முருகன் உட்பட பலர்
பங்கேற்றனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
No comments