ஒழையூரில் வெள்ளாடுகள் வழங்கும் விழா
உத்தரமேரூர் ஜீன்-6
உத்தரமேரூர் கிழக்குஒன்றியம் ஒழையூர் கிராமத்தில் புதன்கிழமையன்று 41
பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. காஞ்சி
மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றார்.
இவ்விழாவில் காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன், உத்தரமேரூர்
சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் ஒழையூர் கிராமத்தில்
41 பயனாளிகளுக்கும், நெய்யாடுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 45
பயனாளிகளுக்கும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி தமிழக முதல்வரின்
சாதனைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மானாம்பதி பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
உத்தரமேரூர் கிழக்குஒன்றியம் ஒழையூர் கிராமத்தில் புதன்கிழமையன்று 41
பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடந்தது. காஞ்சி
மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தனர். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு வரவேற்றார்.
இவ்விழாவில் காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் லி.சித்ரசேனன், உத்தரமேரூர்
சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் ஒழையூர் கிராமத்தில்
41 பயனாளிகளுக்கும், நெய்யாடுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 45
பயனாளிகளுக்கும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி தமிழக முதல்வரின்
சாதனைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மானாம்பதி பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments