உத்தரமேரூரில் மழை நீர் சேகரிப்பு பேரணி
உத்தரமேரூர்
பேரூராட்சி மன்றம் சார்பில் வியாழக்கிழமையன்று மழைநீர் சேகரிப்பு பேரணி நடந்தது. பேரூராட்சி
மன்றத்தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். செயல் அலுவலர்
சு.ஆரோக்கியதாஸ் வரவேற்றார். துணைத்தலைவர்
ஏ.தயாளன் முன்னிலை வகித்தார். பேரூராடசி மன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவியர் ஆகியோர்
மன்ற அலுவலகத்தில் இருநது மழை நீர் சேகரிப்பு பேரணி புறப்பட்டு பஜார் வீதி வழியாக வரும்
போது மழை நீர் சேகரிப்பு துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடம் வழங்கி கோஷமிட்டு சென்றனர்.
இளநிலை உதவியாளர் மே.ச.வெ.அனந்தசயனம் நன்றி கூறினார்.
No comments