Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியம் நகர அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம்

உத்தரமேரூர் ஜீன் ,22
உத்தரமேரூர் அ.தி.மு.க கிழக்கு மேற்கு ஒன்றியம் பேரூராட்சி நகர கழக
சார்பில் சனிக்கிழமையன்று செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் இந்திராணி திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய கழக அவைத்தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை வரவேற்றார் காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாரும், உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான  வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரித்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னைய்யா கலந்து கொண்டு பேசியது. தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி
வருகிறார்கள் ஒரே நாளில் உத்தரமேரூர் இன்று 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம், அ,தி,மு,க,வில் கூடுதல் கழக  உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ,தி,மு,க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற பெற செய்ய வேண்டும் தனியாக நின்றுபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில் உள்ள அ.தி.மு.கவை போல் எந்த கட்சிக்கும் தைரியம் இல்லை என்றார் அமைச்சர் இக்கூட்டத்தில் ஒன்றிய குழுதலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கே.பிரகாஷ்பாபு மானாம்பதி ஏ.இராஜாமணி, மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலவாக்கம் வனிதா முருகன், புலியூர் பழனி, புத்தளி குணசேகரன், மற்றும் எம்,கே,பி,வேலு பொருளாளர் அண்ணாதுரை பொ,சசிக்குமார்  சதீஷ்
பி,வில்வபதி உட்படபலர் கலந்து கொண்டனர், நகர தலைவர் கெ.லட்சுமணன் நன்றி கூறினார்.

No comments