Disqus Shortname

சமுதாய வளைகாப்பு விழா

உத்தரமேரூர் ஜீன்,13
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய 1முதல் 3வது வரை தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமையன்று ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யபிரபா தலைமை தாங்கினார். உத்தரமேரூர் பேரூராடசி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மரகதம் அனைவரையும் வரவேற்றார். 30 கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் 5 வகையான உணவுகள் அளிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன் வார்டு உறுப்பினர் சுப்புராயன் உண்ணாமலை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொது மக்கள் பங்கேற்றனர்.


No comments