Disqus Shortname

உத்தரமேரூரில் 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்தரமேரூர் ஜீன்,22
உத்தரமேரூரில் சனிக்கிழமையன்று 570 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளரும் வாலாஜாபாத் பா.கணேசன் கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னைய்யா, மாவட்ட ஆட்சியர் எல்.சித்ரசேனன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடும்ப அட்டை 475 உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவி தொகை 36 விதவை உதவித்தொகை21 மாற்று திறனாளிகள் உதவி தொகை3, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவி தொகை 5, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகை 5, வீட்டு மனைப்பட்டா 25 ஆக மொத்தம் 570,
பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகள் பற்றி சிறப்புரையாற்றினார்கள் இவ்விழாவில் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணணாமலை கே.பிரகாஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். காஞ்சி வருவாய் கோட்ட அலுவலர் சக்திமணி நன்றி கூறினார்.

No comments