Disqus Shortname

காரியமங்கலத்தில் 50 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கறவை பசுமாடுகள் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீன்,02
உத்தரமேரூர் தாலுக்கா காரியமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று 50 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் விலையில்லா கறவை பசுமாடுகள் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சீனுவாசன் வரவேற்றார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கால்நடைதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா, மாவட்ட ஆட்சியர் எல்.சித்ரசேனன் எம்.எல்.ஏ. வாலாஜாபாத்.பா.கணேசன் ஆகியோர் 50 பயனாளிகளுக்கு கன்றுடன் கூடிய பசுமாடுகளை வழங்கி தமிழக முதல்வர் செய்து வரும் சாதனைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் ஒழையூர் ஆர்.நாராயணசாமி, குண்ணவாக்கம், ஆர்,கிருஷ்ணமூர்த்தி, புலியூர் பழனி, உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments