Disqus Shortname

அம்மா திட்டம் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா வழங்கும் விழா

உத்தரமேரூர்  ஜீன்-11
உத்தரமேரூர் தாலுக்காவில் செவ்வாய்கிழமையன்று அம்மா திட்டத்தின் கீழ்
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை ஆகியவைகளை
இராவத்தநல்லூர், கரும்பாக்கம், எடமிச்சி ஆகிய கிராமங்களில் வழங்கும்விழா
நடந்தது. கோட்ட அலுவலர் தாமோதரன் தலைமை தாங்கினார்.  உத்தரமேரூர்
வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார்.  உத்தரமேரூர் தனி வட்டாட்சியர்
கே.கிரிஜா முன்னிலை வகித்தார். மூன்று கிராமங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு
முதியோர்உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, புதியகுடும்பஅட்டைக்கான ஆணைகளை
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி
சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்,
துணைத்தலைவர் அ.ரவிசங்கர், இராவத்தநல்லூர் ஊராட்சி மன்றத்தலைவர்
அமுதாசந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் வெரோனிக்காஅமலோற்பவராஜ்,
துணைத்தலைவர் பி.எம்.அருள்தாஸ், கிளை செயலாளர்கள் பச்சையப்பன்,
ஆர்.சம்பத்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், களியாம்பூண்டி
ஒன்றியகுழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம், பொ.சசிகுமார், சதீஷ் மற்றும்
வருவாய் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மானாம்பதி ராஜாமணி நன்றி கூறினார்.

No comments