Disqus Shortname

மயானத்திற்கு பாதை வசதி தேவை

உத்திரமேரூர் ஜூன் 18:

மதூர் காலனியில் உள்ள மயானத்திற்கு, பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளது மதூர் ஊராட்சி. இங்குள்ள, காலனி பகுதியில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கான மயானத்திற்கு செல்ல, முறையான பாதை வசதி இல்லாததால், இப்பகுதியில் இறந்தவர்களுக்கு, இறுதி சடங்குகளை மேற்கொள்ள, அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சிலர் கூறியதாவது:"காலனி பகுதிக்கான மயானத்திற்கு செல்ல, பாதை அமைத்து தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும், கிராம சபை கூட்டங்களில், தீர்மானம் நிறைவேற்றியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மயானத்திற்கு செல்ல, பாதை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் சேறும், சகதியிலும் சிரமப்பட வேண்டிஉள்ளது. எனவே, அதிகாரிகள் இதுகுறித்து, ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். 

No comments