சாலவாக்கம் கிளை நுாலகம் சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை
உத்தரமேரூர் ஜீன் 10
உத்தரமேரூர்
தாலுக்கா சாலவாக்கம் கிளை நுாலகத்தை சீரமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். கடந்த 20.05.2013 ம் தேதியன்று மாவட்ட ஆட்சியருக்கு பொது
மக்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு- சாலவாக்கத்தில் 1964 லிருந்து கிளை
நுாலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடம் பழதடைந்ததால் அதை சீரமைக்க
வேண்டி பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று
வரை சீரமைக்கும் பணி நடைபெறவில்லை மக்களுக்கு பயன்படாமல் நுாலகம்
கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது. நுாலக சீரமைப்பு பணிக்களினால்.
தற்காலிகமாக நுாலகம் சாலவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு அறையில்
செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த அறை பூச்சி தொந்தரவுகளினாலும் பொது
மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நுாலகத்தில் உள்ள புத்தகங்கள்
மழை பெய்தால் முற்றிலும் சேதாரமடைந்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்படாமல்
போய்விடும் நிலை உள்ளது. ஆனால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் பிடிவாதமாக பள்ளி
கதவை பூட்டிவிடுகிறார். தற்காலிகமாக நுாலகருக்கும், பொது மக்களுக்கும் மிகுந்த சிரமமாக தடுப்புச் சுவரை தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளதை விரைவில் பொது மக்கள் பயன்படுத்த நுாலகத்தை சீரமைத்துதர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
No comments