Disqus Shortname

பாப்பநல்லுாரில் 288 பயனாளிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா

உத்தரமேரூர் ஜீன்,01
உத்தரமேரூரை அடுத்த மதுராந்தகம் தாலுக்கா பாப்பநல்லுார் கிராமத்தில் 288 பயனாளிகளுக்கு விலையில்லா பேன்,மிக்சி, கிரைண்டர், வழங்கும்விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.ஜோதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆஞ்சலாமேரி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மதுராந்தகம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கணிதாசம்பத் கலந்துகொண்டு விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்களை வழங்கி பாராட்டி பேசினார். பனிதள பொறுப்பாளர் எஸ்.துரை வரவேற்றார். கவுன்சிலர் அபரஞ்சி அம்மாள்  மற்றும் அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் பி.வி.வேணுப்பிள்ளை கலந்துகொண்டனர். கவுன்சிலர் முடியப்பன் நன்றி கூறினார்.

No comments