வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வுக் கூட்டம்
உத்தரமேரூர்
ஜீன்,19 :
உத்தரமேரூரில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். காஞ்சி வருவாய் கோட்ட அலுவலர் சக்திமணி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் கலந்துகொண்டு கிராமங்களில் விடுபட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை ஆகியவைகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள் லஷ்மி, கலைமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஒன்றியக் குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உத்தரமேரூரில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்றார். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். காஞ்சி வருவாய் கோட்ட அலுவலர் சக்திமணி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் கலந்துகொண்டு கிராமங்களில் விடுபட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை ஆகியவைகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள் லஷ்மி, கலைமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஒன்றியக் குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments