கோவில் கும்பாபிஷேகம்
உத்தரமேரூர் ஜீன்,23
உத்தரமேரூர்
அடுத்த குண்ணவாக்கம் மாம்புத்துார் கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக
எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி கண்ணனுார் அம்மன் திருக்கோயில், செல்வவிநாயகர்
திருக்கோயில்களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாம்புத்துார் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தேவி கண்ணனுார்
அம்பிகை ஆலயம், விநாயகர் ஆலயம், ஏரிகரையில் உள்ள வேலத்தம்மன் ஆலயம்
ஆகியவற்றுக்கு புதிய கோபுரம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி
முதல்நாள் புதன்கிழமை 2ம் நாள் வியாழக்கிழமை சிறப்பு
பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. 3-வது நாள் வெள்ளிக்கிழமை காலை
நான்காம் கால பூஜையும், அடுத்து பிரதான கலசங்கள் ஆலயம் வலம் வருதல்
நிகழ்ச்சியும் அதையடுத்து கோபுர விமானங்கள் கும்பாபிஷேகம் பரிவார சகீத
கண்னனுாரன் கும்பாபிஷேகம், தீர்த்த பிரசாதம், வழங்குதல், உள்ளிட்ட
நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆயிரக்கண பக்தர்கள்
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா
குழுவினர், மாம்புத்துார் கிராமத்தினர் மற்றும் உபயதார்கள் உள்ளிட்டோர்
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
No comments