உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கும்
விழா நடந்தது. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் நடந்த
விழாவுக்கு வாலாஜாபாத் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்
தியாகராஜன் வரவேற்று பேசினார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்ரசேனன்
விழாவில் கலந்துகொண்டு 575 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கி
பேசினார். ஓன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை
வகித்தார்.விழாவில் உத்திரமேரூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை. கே.பிரகாஷ்பாபு, ஒன்றியகுழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர்,
பேரூராட்சி செயலாளர் கே.லட்சுமணன், கவுன்சிலர் சர்தார்கான் உத்திரமேரூர்
கூட்டுறவு விவசாய வங்கி துணைத்தலைவர் பி.சசிகுமார் மற்றும் பலர்
கலந்துகொண்டனர்.
No comments