Disqus Shortname

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

உத்தரமேரூர் ஏப்.30.
        உத்தரமேரூர் ஒன்றிய ஆசிரியர் நலநிதி சார்பில் 20-ம் ஆண்டு நிறைவு
விழாவும். பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுகக பாராட்டு விழாவும் உத்தரமேரூர்
ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி நடுநிலை பள்ளியில் ஞாயிறன்று நடந்தது, தலைவர்
எஸ்.குமார் தலைமை தாங்கினார். பா.பர்னபாஸ்பால்ரவிச்சந்திரன் முன்னிலை
வகித்தார். ஏ-நாகவல்லி வரவேற்றார். செயலாளர் டி.ஜி.லியோ ஆண்டறிக்கை
வாசித்தார். கே.தணிகாசலம் அறிக்கை வாசித்தார். இளநகர் ஊராட்சி பள்ளி
தலைமை ஆசிரியர் ந.சரஸ்வதி பெண்ணலூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்
மு.சம்மந்தன், சாத்தனஞ்சேரி ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னகுமாரி
ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எ.பச்சையப்பன் கூடூதல் உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வட்டாரவளமைய மேற்பார்வையாளர்
ஏ.ராஜேந்திரன், நலநிதி முன்னாள் தலைவர் டி.இரமணி, மு.சுதர்சனம் ஆகியோர்
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கணையாழி அணிவித்து பாராட்டி
பேசினார்கள். தலைமை ஆசிரியை இல.மலர்விழி நன்று கூறினார்.

No comments