Disqus Shortname

அரசு பொது மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர்
 உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனையின் சீர்கேட்டைக் கண்டித்து செவ்வாய்கிழமை சி.ஐ.டி.யூ. அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்பாட்டம்
நடைபெற்றது.
சுமைப்பணி சங்க பி.ஆறுமுகம், முருகன், லோடு ஆட்டோ சங்க இ.குமார் போக்குவரத்து பணிமுனை கே.மனோகரன், நகர கிளை ஜி.ஆர்.டி.சங்கர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாநில செயற்குழு எஸ்.கண்ணன் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பாஸ்கரன் பேசியது: உத்தரமேரூர் அரசு பொது மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இரவு நேர மருத்துவரையும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவேண்டும். பாம்பு கடி, வெறிநாய்கடி உள்ளிட்ட உயிர்காக்கும் தடுப்பு மருத்துகளைத் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

No comments