அனைவருக்கும் கல்வி இயக்கம் தீவிர மாணவர் சேர்க்கை
உத்தரமேரூர் மே,29
உத்தரமேரூர்
பேரூராட்சி 2-வது வார்டு கல்லமாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
புதன்கிழமையன்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தீவிர மாணவர்
சேர்க்கை நடைபெற்றது. உதவி தொடக்கல்வி அலுவலர் பச்சையப்பன், கூடுதல் உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி வட்டார வளமைய மேற்பார்வையாளர்
ஏ.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 5 வயது நிரம்பிய குழந்தைகள் 25 மாணவ
மாணவியர் முதல் வகுப்பில் சேர்க்கபட்டனர். அவர்கள் அனைவருக்கும் தமிழக
முதல்வர் ஜெயலலிதா வழங்கிய விலையில்லா நோட்டு, புத்தகம், சீருடைகள்,
வழங்கப்பட்டன. பள்ளித்தலைமை ஆசிரியை இரமாதேவி அனைவரையும் வரவேற்றார். 2 வது
வார்டு கவுன்சிலரும், பள்ளி கல்விக்குழு தலைவருமான எஸ்.சுரேஷ் நன்றி
கூறினார். இவ்விழாவில் ஆசிரியர் பயிற்றுநர்கள், வெங்கடேசன் ஆசிரியர்கள்,
கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களை பள்ளியில் சேர்க்ககோரி பேரணி நடந்தது.
No comments