உத்தரமேரூர் மே,31உத்தரமேரூர்
அருகே இரு சக்கர வாகனம் புளிய மரத்தில் மோதியதில் 2 இளைஞர்கள் சம்பவ
இடத்திலேயே பலியாயினர் காஞ்சி மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியை
சேர்ந்தவர்கள் இருவரும் நண்பர்கள் இவர்களின் மற்றொரு நண்பனின் உறவினர் வீடு
உத்தரமேரூர் தாலுக்கா சோழனுார் பகுதியில் உள்ளது. வியாழக்கிழமையன்று இரவு
அப்துல்அஜீஸ் சாமிநாதன் முருகன் மூவரும் இரு சக்கர வாகனத்தில் சோழனுார்
பகுதிக்கு சென்றுள்ளனர். பின்பு அப்துல்அஜீஸ் மற்றும் சாமிநாதன் இருவர்
மட்டும் கூடுவாஞ்சேரிக்கு திரும்ப செல்லும் போது உத்தரமேரூர் அருகே
குப்பையநல்லுா்ர பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பும் போது
எதிர்பாராதவிதமாக வாகனம் சறுக்கியதில் எதிரே உள்ள புளிய மரத்தில் மோதி
துாக்கிவீசப்பட்டுள்ளனர். இதில் சம்பவ் இடத்திலேயே இருவரும் பலியாயினர் இது
குறித்து தகவல் அறிந்த உத்தரமேரூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி
செங்கை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப வைத்து விசாரித்து
வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வளைவில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால்
சம்மந்தபட்ட அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறையினரும தக்க நடவடிக்கை எடுக்க
பொது மக்கள் கூறினார்கள்.
உத்தரமேரூர் அருகே பைக் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் பலி
Reviewed by Uhiramerur News.Com Admin
on
May 31, 2013
Rating: 5
No comments