Disqus Shortname

பேரூராட்சிகளில் குறைகளை தெரிவிக்க அலைபேசி எண் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்

 உத்திரமேரூர் மே 07,2013,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், பொதுவான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்களில், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் நிலவும் குறைகளை, அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிடையாகவோ சென்று தெரிவிக்க வேண்டும்.இந்த நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை துரிதமாக தெரிவிக்கும் வகையில், பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, பொதுவான அலை பேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அலைபேசிகளை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் வைத்திருப்பர்.பொதுமக்கள் ஏதேனும் குறைகள் குறித்து, புகார் தெரிவிக்க வேண்டும் எனில், இந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். குடிநீர், மின் விளக்கு சம்பந்தமான குறைகளை, குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கலாம். விடுமுறையிலும் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பேரூராட்சி அலைபேசி எண்

உத்திரமேரூர் 8883100158
அச்சிறுபாக்கம் 8883100142
சிட்லப்பாக்கம் 8883100143
இடைக்கைநாடு 8883100144
கருங்குழி 8883100145
குன்றத்தூர் 8883100146
மாடம்பாக்கம் 8883100147
மாமல்லபுரம் 8883100148
மாங்காடு 8883100149
கூடுவாஞ்சேரி 8883100150
பீர்க்கண்காரணை 8883100151
பெருங்களத்தூர் 8883100152
செம்பாக்கம் 8883100153
ஸ்ரீபெரும்புதூர் 8883100154
திருநீர்மலை 8883100155
திருப்போரூர் 8883100156
திருக்கழுக்குன்றம் 8883100157
வாலாஜாபாத் 8883100159

No comments