உத்தரமேரூர் அருகே மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்த தாய்
உத்தரமேரூர் மே 20
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா, குப்பையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஜெரினா(35) இவருக்கு ஜாகிஉள்ளா(5), கிஸ்மத்(இரண்டரை வயது), யாஸ்மின் (ஒன்றரை வயது) குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை
செய்துகொள்ள முயன்ற தாய் ஜெரினா பிழைத்துக்கொண்டார். மூன்று குழந்தைகளும் கிணற்றிலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி கூறப்படுதாவது:-ஜெரினா என்பவரின் சொந்த ஊர் வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமம், இவரது கணவர் இஸ்மாயில் அண்மையில் காலமாகிவிட்டார். சிறிதுநாள் கழித்து உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தில் குடியிருக்கும் தாஸ் என்பவரின் மகன் அருள் என்பவர் சோன்பப்படி வியாபாரம் செய்ய அம்மையப்பட்டு கிராமத்திற்கு சென்றுவந்தபோது அவ்வூரில் வசித்து வந்த ஜெரினா(35)-விற்கும், அருள் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு தாயையும், மூன்று குழந்தைகளையும் குப்பையநல்லூர் கிராமத்திற்கு அழைத்துவந்து
குடும்பம் நடத்தியுள்ளார். இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது அருள் ஜெரினாவை பார்த்து உனக்கு பிறந்த மூன்று குழந்தைகளையும் உன் கணவர் வீட்டில் விட்டுவிட்டு வா என்று கூறியுள்ளார். இதைகேட்ட தாய் ஜெரினா அங்குள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளையும் வீசி தானும் கிணற்றில் குதித்துள்ளார். மூன்று குழந்தைகளும் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி இறந்தனர். தாய் ஜெரினா பிழைத்துக்கொண்டார். இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை செய்துவருகின்றனர். இச்செய்தி உத்தரமேரூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா, குப்பையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஜெரினா(35) இவருக்கு ஜாகிஉள்ளா(5), கிஸ்மத்(இரண்டரை வயது), யாஸ்மின் (ஒன்றரை வயது) குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலை
செய்துகொள்ள முயன்ற தாய் ஜெரினா பிழைத்துக்கொண்டார். மூன்று குழந்தைகளும் கிணற்றிலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி கூறப்படுதாவது:-ஜெரினா என்பவரின் சொந்த ஊர் வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமம், இவரது கணவர் இஸ்மாயில் அண்மையில் காலமாகிவிட்டார். சிறிதுநாள் கழித்து உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தில் குடியிருக்கும் தாஸ் என்பவரின் மகன் அருள் என்பவர் சோன்பப்படி வியாபாரம் செய்ய அம்மையப்பட்டு கிராமத்திற்கு சென்றுவந்தபோது அவ்வூரில் வசித்து வந்த ஜெரினா(35)-விற்கும், அருள் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு தாயையும், மூன்று குழந்தைகளையும் குப்பையநல்லூர் கிராமத்திற்கு அழைத்துவந்து
குடும்பம் நடத்தியுள்ளார். இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது அருள் ஜெரினாவை பார்த்து உனக்கு பிறந்த மூன்று குழந்தைகளையும் உன் கணவர் வீட்டில் விட்டுவிட்டு வா என்று கூறியுள்ளார். இதைகேட்ட தாய் ஜெரினா அங்குள்ள கிணற்றில் மூன்று குழந்தைகளையும் வீசி தானும் கிணற்றில் குதித்துள்ளார். மூன்று குழந்தைகளும் பரிதாபமாக கிணற்றில் மூழ்கி இறந்தனர். தாய் ஜெரினா பிழைத்துக்கொண்டார். இதுகுறித்து உத்தரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை செய்துவருகின்றனர். இச்செய்தி உத்தரமேரூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
No comments