ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
உத்தரமேரூர் தாலுக்கா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் ஞாயிற்றுகிழமை ரூ.8.5 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத் திறப்பு விழா நடந்தது. ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
No comments