ஒழையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டுவிழா
உத்தரமேரூர் மே-2
உத்தரமேரூர் தாலுக்கா, ஒழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா அண்மையில் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் மு.எல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியர் பா.பர்ணபாஸ்பால்ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு
விருந்தினராக சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
எம்.வசந்தகுமார், செங்கற்பட்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
எஸ்.கே.அங்காளஈஸ்வரி, ராம்கோ சிமெண்ட் முதன்மை பொதுமேலாளர்
ஆர்.மீனாட்சிசுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள்
வழங்கினார்கள். ராம்கோ சிமெண்ட் நிர்வாகம் பள்ளிக்கு குடிநீர் ட்ரம், மாணவர்களுக்கு புத்தகபைகள் வழங்கினார்கள். இவ்விழாவில்
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ.ராஜேந்திரன், உதவி தொடக்கல்வி அலுவலர்
பி.பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் டி.விஜயலட்சுமி,
காஞ்சி மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் பா.ச.மாசிலாமணி, முன்னாள்
மாவட்ட கவுன்சிலர் ஆர்.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்திபேசினார்கள். ஆர்.சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
No comments