Disqus Shortname

மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் ஒருவர் பலி

உத்தரமேரூர் மே,29
உத்தரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி 2 ஆடுகள் மற்றும் ஒருவர் பலியானார். உத்தரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் செவ்வாய்கிழமையன்று மாலை தனது இரண்டு ஆடுகளை காணவில்லை என்று தேடி சென்றார். அப்பொழுது சங்கரன் என்பருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் மின் கம்பி அருந்து கீழே விழுந்திருந்ததை  ஆறுமுகம் கவனிக்காமல் காலை வைத்ததில்   மின்சாரம்  தாக்கி சம்பவ இடத்திலேயே ஆறுமுகமும் இவரது ஆடுகளும் இறந்தன.  இது குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments