உத்தரமேரூரில் தொடர் மின்வெட்டால் பொது மக்கள் பாதிப்பு
உத்தரமேரூர் மே,29
உத்தரமேரூரில்
தொடர் மின்வெட்டால் பொது மக்கள் பாதிப்பு அடைந்தனர். செவ்வாய்கிழமையன்று
மின் வாரியத்தினர் பராமரிப்பு, மற்றும் பழது பார்த்தளலுக்காக மாதா மாதம்
மின் நிறுத்தம் செய்வது வழக்கம் இதன் காரணமாக மே 28ம்
தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படும் என்று
பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் மாலை 5,35 மணிக்கு மின்
இணைப்பு கொடுக்கப்பட்டு 5 நிமிடத்தில் மின் துணடிப்பு ஏற்பட்டு இரவு 8 மணி
வரை மின் துண்டிப்பு செயல்பட்டதால் பொது மக்கள் வியாபாரிகள்
பாதிப்புயடைந்தனர்.
No comments