உத்தரமேரூரில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைக் கொண்டாட்டம்
உத்தரமேரூர் கிழக்கு, மேற்கு நகர அதிமுக சார்பில் வியாழக்கிழமை அதிமுக
அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. உத்தரமேரூர் பஸ் நிலையத்தில்
உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு காஞ்சி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும்,
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் மாலை
அணிவித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர்
அ.ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, மாவட்ட
எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments