Disqus Shortname

உத்தரமேரூரில் ஜமாபந்தி நிறைவு

உத்தரமேரூர்  மே 16:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்தில் 1422-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் மே 2-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி புதன்கிழமை முடிவடைந்தது.
ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தனித் துணை ஆட்சியர் மு.காமராசர் (ச.பா.தி) தலைமை தாங்கினார். உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன் வரவேற்று முன்னிலை வகித்தார். அவ்வமயம் நடைபெற்ற இரயத்து கூட்டத்தில் உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 149 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட உத்தரவும், 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவும் வழங்கினார்.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றியக் கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, பேரூராட்சி துணைத் தலைவர் இ.தயாளன், காஞ்சி மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத் தலைவர் ஆர்.நாராயணசாமி, புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் வரதராசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments