Disqus Shortname

அதிமுக அரசின் 3-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் தாலுக்கா, வெங்கச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுகிழமை அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்கமும், மூன்றாவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.
  கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.  ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் வரவேற்றார். விழாவில் தலைமைக் கழக பேச்சாளர் ஜானகிராமன், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம், காவாம்பயிர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.குணசேகரன், ஆதவப்பாக்கம் கோதண்டன், ரமேஷ், புலிவாய் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராஜ்குமார் உட்பட பலர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய இளைஞரணி பாசறை இணைச்செயலாளர் எ.ராமன் நன்றி கூறினார்.

No comments