Disqus Shortname

வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட   காமேஷ் (33)
 உத்தரமேரூர்ஆக,09:
உத்தரமேரூர் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அருகே கடந்த 30ம் தேதி வாலிபர் ஒருவர், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் கழுத்து அறுத்து ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.விசாரணையில் தளவராம்பூண்டி செல்லும் சாலையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை மாதவரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (26) என தெரிந்தது. செஞ்சியில் இறந்து கிடந்தது அசோக்குமாரின் நண்பர் பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லேன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார் (26) என தெரிந்தது.

இந்த கொலைகள் தொடர்பாக கோயம்பேடு வெள்ளைதுரை (53), குடியாத்தம் ராஜேஷ் (26), காரைக்குடி ரகு (26), முதுகளத்தூர் செந்தில்குமார் (26), சென்னை சந்துரு (26) ஆகியோரை கடந்த 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், உத்திரமேரூர் எண்டத்தூர் சாலை அரசன் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாளுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், அந்த வாலிபர் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.அதில், அவர் சென்னை மாதவரத்தை சேர்ந்த காமேஷ் (33) என்றும், அசோக்குமார், சுரேஷ்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. மேலும், மேற்கண்ட கொலைகளில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்து, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். உத்தரமேரூர்: உத்தரமேரூர் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அருகே கடந்த 30ம் தேதி வாலிபர் ஒருவர், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் கழுத்து அறுத்து ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.விசாரணையில் தளவராம்பூண்டி செல்லும் சாலையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை மாதவரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (26) என தெரிந்தது. செஞ்சியில் இறந்து கிடந்தது அசோக்குமாரின் நண்பர் பழைய வண்ணாரப்பேட்டை மாடல் லேன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார் (26) என தெரிந்தது.

இந்த கொலைகள் தொடர்பாக கோயம்பேடு வெள்ளைதுரை (53), குடியாத்தம் ராஜேஷ் (26), காரைக்குடி ரகு (26), முதுகளத்தூர் செந்தில்குமார் (26), சென்னை சந்துரு (26) ஆகியோரை கடந்த 5ம் தேதி போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், உத்திரமேரூர் எண்டத்தூர் சாலை அரசன் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாளுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், அந்த வாலிபர் தப்பியோடினார். அவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.அதில், அவர் சென்னை மாதவரத்தை சேர்ந்த காமேஷ் (33) என்றும், அசோக்குமார், சுரேஷ்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. மேலும், மேற்கண்ட கொலைகளில் இவருக்கு தொடர்பு இருப்பதும்  தெரிந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்து, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

No comments