கல்வி விழிப்புணர்வு முகாம்
உத்தரமேரூர் ஆக,08
ஹேண்டு இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து வினோபாநகர், பகுதியில் இருளர் மற்றும் பழங்குடியினருக்கு ஹேண்டு இன் ஹேண்ட் கலைகுழு மூலம் கல்வி விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். இம்முகாமில் இருளர் மற்றும் பழங்குடியினமக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கலைக்குழுவின் மூலம் பாடல்கள், நாடகங்கள், மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி கல்வியின் முக்கியத்துவம், 10-ம் வகுப்பு வரை கட்டாய கல்வி, கல்விக்கு தமிழக அரசு தரும் முன்னுரிமை மற்றும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இருளர் மற்றும் பழங்குடியினமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணத்தலைவர் கன்னியம்மாள்முனுசாமி சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் புதுவாழ்வு திட்ட கணக்காளர் கமலா நன்றி கூறினார்.
ஹேண்டு இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து வினோபாநகர், பகுதியில் இருளர் மற்றும் பழங்குடியினருக்கு ஹேண்டு இன் ஹேண்ட் கலைகுழு மூலம் கல்வி விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் தலைமை தாங்கினார். இம்முகாமில் இருளர் மற்றும் பழங்குடியினமக்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கலைக்குழுவின் மூலம் பாடல்கள், நாடகங்கள், மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி கல்வியின் முக்கியத்துவம், 10-ம் வகுப்பு வரை கட்டாய கல்வி, கல்விக்கு தமிழக அரசு தரும் முன்னுரிமை மற்றும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இருளர் மற்றும் பழங்குடியினமக்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணத்தலைவர் கன்னியம்மாள்முனுசாமி சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் புதுவாழ்வு திட்ட கணக்காளர் கமலா நன்றி கூறினார்.
No comments