Disqus Shortname

ஆதி திரவிடர் நல பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர்ஆக,17
உத்தரமேரூர் அடுத்த அரசினர் ஆதி திரவிடர் நல மேல்நிலைப்  பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று
நடைபெற்றது. உத்தரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமம்த்தில் உள்ள அரசினர் ஆதிதிரவிடர் நல மேல்நிலைப்  பள்ளியில் உள்ள 10-12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இதில் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது, கல்வி உதவிதொகை, கல்வி விழிப்புணர்வு போன்றவற்றை பற்றி விளக்கிப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர் ஜெயந்தி வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் மூத்த நிர்வாகி இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.

No comments