Disqus Shortname

சாலவாக்கத்தில் 6 லட்சத்தில் கூட்டுறவு நியாயவிலை கடை திறப்பு

உத்தரமேரூர் ஆக,02
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் சனிக்கிழமையன்று 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு நியாயவிலை கடை புதிய கட்டிடத்தை உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரிசிகள் வழங்கி பேசினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதாமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் தனக்கோட்டிகன்னியப்பன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கசெயலாளர் கந்தசாமி வரவேற்றார். இவ்விழாவில் எம்.எல்.ஏ.பேசியது. 90 சதவீதம் கட்டிட பணிகளுக்கு நிதிதந்து செயல்படுத்தி வருபவர் தமிழக முதல்வர் மட்டும் தான் 3 வருடங்களில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளும் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களையும் கூட்டுறவு துறையை சீரமைத்து சாதனை படைத்தவரும் வங்கியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி அளித்து வருபவரும் தமிழக முதல்வர் தான். இக்கூட்டத்தில் தண்டரை தணிகைவேல், மாவட்டகுழு உறுப்பினர் சுமதிகுணசீலன், வட்டாரவளர்ச்சி அலுவலர் நிர்மலா, குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜிலு உட்பட பலர் பங்கேற்றனர். திருவந்தவார் முருகன் நன்றி கூறினார்.  

No comments