Disqus Shortname

உத்தரமேரூரில் ஸ்ரீ.நுக்கலம்மன் ஆலய 27-ம் ஆண்டு தீமிதி திருவிழா

உத்தரமேரூர் ஆக,14

உத்தரமேரூர் உள்ள ஸ்ரீ.நுக்கலம்மன் ஆலயத்தில் 27-ம் ஆண்டு தீமிதி
திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. காலை நங்கையர்குளத்தில் இருந்து புனிதநீர் திரட்டிவந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் கோவிலின் வளாகத்தில் பக்தர்கள் ஊரணிப் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மதியம் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்ப்பட்டது. மாலை 6 மணி அளவில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு 9 மணியளவில் பூங்கரகம், சிலம்பாட்டம், பொய்கால்குதிரை, கரக்காட்டத்துடன் ஸ்ரீ.நூக்கலம்மன் புஷ்ப விமான பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி டி.ரமேஷ் மற்றும் விழாக்குழுவினர்
சிறப்பாக செய்திருந்தனர்.

No comments