உத்தரமேரூரில் தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம்
உத்தரமேரூர் ஒன்றிய பேரூர் கழக தே.மு.தி.க சார்பில்
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று உத்தமேரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர்
நல்லூர் ஜீ.கே.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு எம்.எல்.ஏவும் காஞ்சி
வடக்கு மாவட்ட செயலாளருமான அனகை முருகேசன் மற்றும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்
ஆர்.இரமேஷ்பிரபாகரன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு உத்தரமேரூர் தொகுதிக்குட்பட்ட
அனைத்து பகுதியிலும் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் அன்று அனைத்து கிளைகளிலும்
உள்ள கல்வெட்டுகள் மற்றும் கொடி கம்பங்களையும் புதுப்பித்து சுத்தம் செய்து
கொடியினை ஏற்றிட வேண்டும். அந்தந்தப்பகுதிகளில் உள்ள தே.மு.தி.க தொண்டர்களும்
தோரணங்கள் கட்டி ஏழை எளிய
மக்களுக்கு அன்னதானம் அளித்தும் இனிப்புகள் வழங்கியும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட
வேண்டும். என்று தே.மு.தி.க தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இவ்விழாவில்
ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் இளைஞரணி செயலாளர் எஸ்.குமார் நன்றி
கூறினார்.
No comments