Disqus Shortname

புல்லம்பாக்கத்தில் 50 பயனாளிகளுக்கு கறவை பசு வழங்கும் விழா

உத்தரமேரூர் ஆக,17
உத்தரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் கிராமத்தில் நேற்று 17 லட்சத்து
ரூபாய் மதிப்பிலான 50 பயனாளிகளுக்கு கறவை பசுக்களை கால்நடை
பராமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புல்லம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பி.எஸ்.ஜெயவேல்
முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் காஞ்சி நாடாளுமன்ற  உறுப்பினர் மரகதம்குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி
எம்.எல்.ஏ.மொளச்சூர்இரா.பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா,
ஒன்றிய செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், உட்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர் உதவி அலுவலர் ராஜன்டிஆண்டனி நன்றி கூறினார்.

No comments