Disqus Shortname

உத்தரமேரூரில் இரு சக்கர வாகனத்தில் இருவர் பலி

உத்தரமேரூர் ஆக,25
உத்தரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (19) அதே பகுதியை சேர்ந்தவர் பள்ளி மாணவன் தீனா (14) இவர் 10-ம் வகுப்பு
பயின்று வருகிறார். நேற்று இரவு இளங்கோவன் சாப்பிடுவதற்க்காக
காரணைமண்டபத்திற்க்கு தீனாவை அழைத்துகொண்டு இருசக்கர வாகனத்தில் காரணைமண்டபம் நோக்கி சொன்று கொண்டிருந்தனர். அப்போது களியாம்பூண்டியை சேர்ந்த அப்பு(18), முரளி(19) இருவரும்  காரணைமண்டபத்திலிருந்து, களியாம்பூண்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராத விதமாக இரு வாகனமும் நேறுக்கு நேர் மோதியது. இதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவம் அறிந்த பெருநகர் போலீஸ்சார் விரைந்து வந்து பார்த்ததில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற
மூன்றுபேரையும் செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தீனா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் மற்ற இருவரும்  தீவிர
சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது குறித்து பெருநகர் போலீஸிசார் வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments