சாலவாக்கத்தில் ஸ்ரீ.ஷீரடி சாய்பாபா ஆலயம் அடிக்கல்நாட்டு விழா
உத்தரமேரூர்
அடுத்த சாலவாக்கம் பகுதியில் நேற்று புதியதாக ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலயம் அடிக்கல் நாட்டு
விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் ஸ்ரீஆனந்த ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் நிர்வாகி சாய்ரமேஷ்
தலைமை தாங்கினார். இவ்விழாவில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசாய்சுதாகர பூர்னாநந்தசுவாமிகள்
சிறப்புவிருந்தினர்களாக கலந்துக் கொண்டு யாகங்கள் மற்றும் பல்வேறு பூமி பூஜைகள் நடத்திய
பின் அடிக்கள் நாட்டனார். சாலவாக்கம் சுற்றியுள்ள பல கிராமத்திருந்து ஆன்மீக அன்பர்களும்,
பக்தர்களும் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments