Disqus Shortname

உத்தரமேரூரில் புதிய கட்டிடத்தில் கனரா வங்கி திறப்பு விழா

உத்தரமேரூர்,ஆக,25
உத்தரமேரூரில் திங்கட்கிழமையன்று கனராவங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அதன் திறப்பு விழா மிக சிறப்பாக நடந்தது. சென்னை கனராவங்கி கிளை பொதுமேலாளர் ஆர்எம்.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கிகனராவங்கி புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வங்கியின் சேவைகள் பற்றி பாராட்டி பேசினார். உத்தரமேரூர் கனரா வங்கி கிளை மேலாளர் ஆர்.சாந்தலிங்கம் அனைவரையும் வரவேற்றார். ஏ.டி.எம்.மையத்தை  துணைபொது மேலாளர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இவ்விழாவில்  ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் 150 அனாதை குழந்தைகளுக்கு  ரூ. 5 ஆயிரம்  மதிப்பிலும், நல்லூரில் உள்ள ஆதரவற்ற  15 நபர்களுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு 15 லட்சம், வீட்டு வசதிகடன் 15 லட்சம்,  டாட்கோ கடன் 2 லட்சம், விவசாய கடன் 8 லட்சமும் உத்தரமேரூர் கனரா வங்கி மூலம் வழங்கப்பட்டது. உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வாலாஜாபாத்பா.கணேசன், முன்னாள் பெரம்பலூர் எம்.எல்.ஏ.செங்கைசிவம், சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், பேரூராட்சி தலைவர் சுமதிகுணசேகரன், ஆலஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமிகருணாநிதி, ஓரக்காட்பேட்டை வி.அண்ணாதுரை, இரா.நாகன், சோழனூர் மா.ஏழுமலை,   என்.எஸ்.பாரிவள்ளல், ஞானசேகரன், பாலாஜிடைல்ஸ் உரிமையாளர் எச்.டகராராம், ஹீராஜீவல்லர்ஸ்  உரிமைளாளர் ஜி.ரமேஷ், ராகவேந்திரா டிஜிட்டல் உரிமையாளர்கள் சிவா, ஆர்.கணேஷ்சீனிவாசன், முனியன் மேஸ்திரி உட்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தர் பிரிட்டோ நன்றி கூறினார்.

No comments