Disqus Shortname

வாலாஜாபாத்தில் 123 மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்களை வழங்கும் விழா கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வழங்கினார்

உத்தரமேரூர், ஆக.17.
உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமை வகித்தார்.  ஒன்றியக்குழு தலைவர் என்.எம்.வரதராஜுலு வரவேற்றார். காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்பா.கணேசன் முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய்2.50இலட்சம் மதிப்பில் 134 பேருக்கு காதொலி கருவி, 14 பேருக்கு 3 சக்கர சைக்கிள், 6 பேருக்கு சக்கர நாற்காலி, 9 செயற்கை கை, கால் உபகரணங்கள், 10 பேருக்கு காலிப்பர் கருவி வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.மொளச்சூர்இரா.பெருமாள் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார், வருவாய் கோட்ட அலுவலர் சந்திரன், ஊராட்சிக்குழு தலைவர் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், உமா, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரி.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொறுப்பு) ஜாஸ்மின் நன்றி கூறினார்.

No comments