Disqus Shortname

மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி பங்கேற்பு

உத்தரமேரூர் ஆக,19
உத்தரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
மரம் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் முன்னிலையில் பள்ளி சுற்றிலும் 40 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் பள்ளி
மாணவ-மாணவியர்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது, கல்வி உதவிதொகை பெறுவது பற்றியும் நீதிபதி விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் 10,12ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்க்கும் மற்றும் ஊனமுற்றோருக்கும் ரூபாய் 29ஆயிரம் மதியிலான பரிசுக்களை சென்னையை சேர்ந்து ரவிகல்பனா குடும்பத்தினர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள், ஒன்றிய கவுன்சீலர் ரவி, வட்டச்சட்டபணிக் குழு நிர்வாகி இராமலிங்கம், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments