ஆலஞ்சேரியில் அதிமுக பொதுக்கூட்டம்
உத்தரமேரூர் பிப்-26
காஞ்சிபுரம்
மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாள்
விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி புதன்கிழமையன்று மாபெரும்
பொதுக்கூட்டம் நடக்கிறது. கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்குகிறார். ஒன்றிய
இளைஞரணி செயலாளர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன்,
மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, தொகுதி செயலாளர்
கே.ஆர்.தருமன், ஒன்றியகுழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர்
சுமதி குணசீலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அவைத்தலைவர் ஆர்.நாராயணசாமி,
மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழக பொருளாளர்
வி.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆர்.புருஷோத்தமன், தோட்டநாவல் ஊராட்சி மன்றத்தலைவர் வரலட்சுமி கருணாநிதி வரவேற்கிறார்கள். காஞ்சி
மேற்கு மாவட்ட கழக செயலாளரும், காஞ்சி எம்.எல்.ஏ.வுமான வி.சோமசுந்தரம்,
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், தலைமை கழக
பேச்சாளர்கள் திரைபட நடிகர் வையாபுரி, இடிமுரசு.இரா.ரவி, மாவட்ட பாசறை
செயலாளர் டி.சந்திரமௌலி உட்பட பலர் சிறப்புரையாற்றுகிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான ஆர்.கமலக்கண்ணன் செய்துவருகிறார்.
No comments