உத்தரமேரூரில் அங்காளபரமேஸ்வரி மயானக்கொல்லை உற்சவம் 11-ம் தேதி நடக்கிறது
உத்தரமேரூர் ஸ்ரீ
அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு
சிவராத்திரி இரவு பூங்கரகம், சக்தி கரகம், அக்கினி கரகம், மேலக்கச்சேரி,
சிலம்பாட்டம், கரகாட்டம், விளயான்புமேளம் மங்கலவாத்தியத்துடன் புஷ்ப விமான
பல்லக்கில் அலங்காரத்துடன் அம்மன் திருவீதிஉலாவும், 11-ம் தேதி
திங்கட்கிழமையன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு மேல்
அன்னையின் மகிமையை கண்ணுரும் வகையில் பக்தர்களின் மெய்சிலிர்க்கவைக்கும்
பிராத்தனை வழிபாடுகளுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், மாலை 6
மணிக்கு மயானக்கொல்லை உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய
நிர்வாகிகள் இ.சம்மந்தன், என்.மணி, கே.முருகன், வி.கே.முருகேசநாட்டார்கள்
செய்துவருகின்றனர்.
No comments