அதிமுக மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசனுக்கு உத்தரமேரூரில் உற்சாக வரவேற்பு
உத்தரமேரூர் மார்ச்-4
தமிழக
முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உத்தரவின்பேரில்
உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசனுக்கு காஞ்சி
மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமனம் செய்துள்ளார். திங்கட்கிழமையன்று
உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழகசெயலாளருமான வாலாஜாபாத்
பா.கணேசன் உத்தரமேரூருக்கு வருகை புரிந்தார். அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை
அணிவித்தார். பேருந்துநிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்க
பஜார்வீதியாக நடந்துவந்த கணேசனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அளித்தனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து
தன்னை மாவட்ட செயலாளராக நியமித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து
பேசினார். உத்தரமேரூர் அதிமுக கோட்டையாக தொண்டர்கள் அனைவரும் அயராது
பாடுபடவேண்டும் என்று கூறினார். மேற்கு கிழக்கு ஒன்றிய கழக
செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன்
ஆகியோர் இனிப்புகள் வழங்கினார்கள்.
No comments